நாமக்கல்; நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச், 25ல் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. தொடர்ந்து பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலோனோர் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம் என தெரிவிக்கவே திறப்பு என்பது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகளை, டிச.,2ல் துவங்கவும், இளங்கலை இறுதியாண்டு வகுப்புகளை, டிச.,7ல் துவங்கவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் துவங்கின. அதில், 150க்கும் மேற்பட்ட மாணவியர் வந்திருந்தனர். அவர்கள் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE