நாமக்கல்: ''புதிய வேளாண் சட்டத்தால் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை,'' என நாமக்கல்லில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு லாபம் இல்லை. அதேவேளையில் புதிய வேளாண் சட்டத்தால் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. இந்த போராட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது. வேளாண் விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லை. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். இதன்மூலம் பல விவசாயிகள் கடனாளிகளாக ஆகிக்கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை, 2014ம் ஆண்டுக்குப் பிறகு, வரும் காலங்களில் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE