நாமக்கல்: நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 26. அவர், நாமக்கல் நகராட்சியில், தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். நேற்று, தன் நண்பர்கள் மூன்று பேருடன், முத்துகாப்பட்டி அருகே உள்ள பெரியசாமி கோவிலுக்கு சென்றவர், சுவாமியை வழிபட்டுவிட்டு, பயணியர் ஆட்டோவில் ஊர் திரும்பியுள்ளார். மாலை, 5:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், படுகாயமடைந்த பெரியசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நண்பர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE