குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி முன், குப்பை குவிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம், ஓலப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இப்பகுதி மக்களால், கல்லூரி முன், மலை போல் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பையை அகற்றி பூச்செடிகள் வைக்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE