மல்லசமுத்திரம்: பள்ளிபட்டி பிரிவு சாலையில், அறிவிப்பு பலகை இல்லாததால், வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மல்லசமுத்திரம் அருகே, பள்ளிபட்டியில் தினமும் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர, கனரக, இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் மல்லசமுத்திரம், சூரியகவுண்டம் பாளையம், பருத்திபள்ளி ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. ஆனால், பிரிவு சாலை இருப்பதற்கான அடையாளமே இல்லை. வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லவேண்டிய பகுதி தெரியாமல் வேறு பகுதிக்கு சென்று நீண்டதூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டியுள்ளது. எனவே, எந்தெந்த சாலை எந்தெந்த பகுதிக்கு செல்கிறது என்பது குறித்த அறிவிப்பு பலகை வைத்தால், வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE