மல்லசமுத்திரம்: கள்ளுகடை பகுதி பஸ் நிறுத்தம் அருகே, வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கள்ளுகடை பகுதி பஸ் நிறுத்தம் வழியாக தினமும் திருச்செங்கோடு, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள், இருசக்கர, நான்கு சக்கர, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனஓட்டிகள் காலநேரம் கருதி, பீக்ஹவரில் வேகமாக வரும்போது, ஆட்களோ, கால்நடைகளோ வந்தால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, அதிகாரிகளிடத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE