சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 21 அடியை தாண்டியதை தொடர்ந்து, கடந்த வாரம், தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரி நீர் செல்லும் வழிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் ஏரிக்கு நீர் வரத்து குறையவே, நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏரிக்கு தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. இதனால், இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 22.15 அடியாக இருந்தது. ஏரிக்கு நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இன்று நண்பகல் 12 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு நீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE