கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் தினமும் 50 டன் காய்கறி வியாபாரம் நடைபெற்றது. கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகம் வாங்கிச்செல்வர். கொரோனா காரணாக மார்ச்சில் மூடப்பட்ட உழவர்சந்தை சமீபத்தில் திறக்கப்பட்டும் வியாபாரம் 20 டன் அளவிற்கே இருந்தது. சில நாட்களுக்கு முன் கம்பமெட்டு ரோடு திறக்கப்பட்டு கேரளாவுக்கு அதன்வழியாக சென்றுவர இ பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் இருமாநில போக்குவரத்தில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கேரள மக்கள் வராததால் இந்த உழவர்சந்தையில் காய்கறி வியாபாரம் தொடர்ந்து 20 முதல் 25 டன் என்ற அளவிலேயே உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE