புதுடில்லி : இம்மாத இறுதி அல்லது ஜன., துவக்கத்தில், கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில், தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிரிஞ்சுகள், தடுப்பூசி போடுபவர்களுக்கு பயிற்சி, குளிர்பதன கிடங்குகள் என தடுப்பூசி விநியோகத்திற்கு மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை தன்னார்வலர்கள் தடுப்பூசி சோதனைக்கு உட்பட்டுள்ளனர். யாருக்கும் மோசமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE