சென்னை : புரெவி புயல் வலுவிழந்ததையடுத்து தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல், இலங்கையில் திரிகோணமலை அருகே, நேற்று இரவில், கரை கடந்தது. இது, நேற்று இரவில், இலங்கையை கடந்து, மன்னார் வளைகுடா வழியாக பாம்பனை நெருங்கியது. தற்போது புரெவி புயல் வலுவிழந்து பாம்பனுக்கு தென்மேற்கே 20 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
![]()
|
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றெழுத்த தாழ்வு மண்டலாமாக வலுவிழக்கும். ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம், தூத்துக்குடி அருகே கரையை கடக்கும்.
இதையடுத்து தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தி்ல் கனமழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE