சென்னை:மத்திய அரசின் வாடகை குடியிருப்பு திட்டத்தில், முதல்கட்டமாக, 1.08 லட்சம் வீடுகள், ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளன.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது,வெளி மாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்க பட்டனர். வேலை பார்த்த இடங்களில், தங்குமிட வசதி கிடைக்காமல், சொந்த ஊர்களுக்கு திரும்பினர். பல லட்சம் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தது, பெரிய சர்ச்சையானது. இதனால், இவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டது.இதற்காக, வெளி மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்காக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு, பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. மேலும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட, குடியிருப்பு திட்டங்களில் மீதமுள்ள வீடுகளையும், இத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுதும், 1.08 லட்சம் வீடுகள், வாடகை திட்டத்தில் ஒதுக்க தயாராக உள்ளதாக, மத்திய வீட்டுவசதித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டப்படி, 1,000 வீடுகள், வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE