சென்னை:தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால், 1,416 பேர் பாதிக்கப் பட்டனர். தற்போது, 10 ஆயிரத்து, 988 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 224 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று, 70 ஆயிரத்து, 156 மாதிரி கள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 382; கோவையில், 140; சேலத்தில் 88; திருவள்ளூரில், 81; செங்கல்பட்டில், 77 பேர் என, 1,416 பேருக்கு தொற்று உறுதியானது. மார்ச் முதல் நேற்று வரை, 1.19 கோடி பேரிடமிருந்து, 1.22 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில், சென்னையில், இரண்டு லட்சத்து, 16 ஆயிரத்து, 496 பேர் உட்பட மாநிலம் முழுதும், ஏழு லட்சத்து, 86 ஆயிரத்து, 163 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில், நான்கு லட்சத்து, 75 ஆயிரத்து, 36 பேர் ஆண்கள்; மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 93 பேர் பெண்கள்; 34 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.சிகிச்சை பெற்று வருபவர்களில், நேற்று, 1,413 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 63 ஆயிரத்து, 428 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 3,536; கோவையில், 935 என, 10 ஆயிரத்து, 988 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று, 14 பேர் உட்பட, இதுவரை, 11 ஆயிரத்து, 747 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE