திருப்புத்துார் : திருப்புத்துார் அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் 50க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன.
இங்குள்ள மண் தளம் மேடுபள்ளமாக உள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகிறது. இதனால் பஸ்களை நிறுத்துவதில் சிரமம் உள்ளது. இரவில் பஸ்சை நிறுத்தி விட்டு வரும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. தொழிலாளர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பராமரிப்புபணி நடைபெறவில்லை. தரை தளத்தை கான்கிரீட் தளமாக மாற்ற தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE