சிவகங்கை : சிவகங்கை அஞ்சல் கோட்ட தலைமை, துணை தபால் நிலையங்களில் பொது சேவை மையம்' துவக்கப்பட்டுள்ளது,'' என கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:இந்த பொதுசேவை மையத்தில் மின்கட்டணம், அலைபேசி ரீசார்ஜ், டாப் அப், போஸ்ட் பெய்டு கட்டணம், தொலைபேசி, பிராட்பேன்ட் கட்டணம், டி.டி.எச். ரீசார்ஜ், எல்.ஐ.சி., பிற தனியார் இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம், மாத தவணை கட்டலாம். இது மட்டுமின்றி விமான மற்றும் பஸ், ரயில் பயண சீட்டு முன்பதிவு செய்யலாம். பள்ளிகல்லுாரி கட்டணம் உட்பட ஏராளமான சேவைகளை பொதுமக்கள் பெறலாம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE