காரைக்குடி : காரைக்குடியில், மின் பராமரிப்பு பணி முறையாக நடைபெறாததால், மின்கம்பங்களில் கொடிகள் வளர்ந்து மரங்களில் மின்கம்பிகள் உரசி தீப்பொறி உருவாகி விபத்து அபாயம் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. 18 வது வார்டு கண்ணதாசன் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கண்ணதாசன் மணிமண்டபத்தின் பின்புறம் உள்ள இப்பகுதியில் அதிக மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் மின்கம்பங்களில் இருந்து செல்லும் மின்கம்பிகள் சிக்கி கிடக்கிறது. மரக்கிளைகளில் மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுகிறது.கணேசன் கூறுகையில், பல இடங்களில் மின்கம்பங்களில் கொடிகள்வளர்ந்துள்ளது.
பல மாதங்களாக, மரக்கிளைகளில் சிக்கியுள்ள மின்கம்பங்கள்குறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்து வருகிறோம்.ஆனால், மரங்களை வெட்டும் மிஷின் இல்லை, ஆட்கள் இல்லை என தொடர்ந்து காரணம் தெரிவிக்கின்றனர்.மின்கம்பிகளில் தீப்பொறி கிளம்பி கீழே நிற்கும் வாகனங்களில் விழுகிறது. மின்கம்பி அறுந்து விழவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE