சென்னை : ''ரஜினி கட்சியால், தி.மு.க., ஓட்டு வங்கியை பறித்து விட முடியாது,'' என, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ஆ.ராஜா கூறினார்.
அவரது பேட்டி: அரசியல் கட்சி துவக்க, எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ரஜினி கட்சியால், தி.மு.க., ஓட்டு வங்கியை பறித்து விட முடியாது. அதேபோல், அ.தி.மு.க., ஊழல் ஆட்சிக்கு எதிரான மன எழுச்சியை, திசை திருப்பி விட முடியாது. ரஜினிக்கு எத்தனை சதவீதம் ஓட்டு இருக்கிறது என, அவர் இன்னும் நிரூபிக்கவில்லை. 'மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல்' என, கூறுகிறார். ஆன்மிகம் என வந்து விட்டால், அங்கு மதச்சார்பற்ற என்ற, வார்த்தைக்கு வேலையில்லை. அவர், ரிஷிகேஷ் சென்று வருகிறார். அவர் எப்படி மதச் சார்பற்ற அரசியல் செய்ய முடியும்? இவ்வாறு, ராஜா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE