திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க மத்திய தொகுப்பில் இருந்து 1000 டன் சுண்டல் (கொண்டைக்கடலை) வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள் வழங்கும் வகையில், ஜூலை - நவம்பர் வரை 5 மாதங்களுக்கு, மாதந்தோறும் ஒரு கிலோ வீதம் ரேஷன் கார்டுக்கு 5 கிலோ சுண்டல் கடலை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.முன்னுரிமை பெற்ற கார்டுதார்களுக்கு இம்மாத இறுதிக்குள் வினியோகிக்க, நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க 1000 டன் அளவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளது. 'பி.எச்.எச்', 'ஏ.ஒய்.ஒய்' என ரேஷன் அட்டையில் குறிப்பிட்டுள்ள கார்டுதாரர்களுக்கு மட்டும் இலவசமாக 5 கிலோ சுண்டலும், இதர கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு மட்டும் வழங்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE