திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் பாதாளச் சாக்கடையின் மெயின் பைப் உடைந்து கடந்த 20 நாட்களாக ஏராளமான கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவு நீரும், செப்டிக் டேங்க் கழிவுகளும் இந்தக் குழாயின் வழியாக வெளியேறுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீர் குழாய் அஞ்சலி பைபாஸ், ஆர்.எம்.காலனி, நந்தவன ரோடு, அசோக் நகர், கோவிந்தாபுரம், கிழக்கு கோவிந்தபுரம், பழநி ரோடு நியூ அக்ரஹாரம் உட்பட பல பகுதிகளிலிருந்தும் வருகிறது. இந்த மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால்அப்பகுதியில் வசிப்போர் தினமும், அந்த துர்நாற்றத்தை சுவாசிக்கின்றனர். எனவே, நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE