சென்னை:துபாயிலிருந்து இருவேறு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 1.19 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை 10:10 மணிக்கு சென்னை வந்தது. அதில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விமானத்திலிருந்த ஒரு இருக்கையின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ தங்க கட்டி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல்செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் துபாயிலிருந்து 'பிளை துபாய்' விமானம் நேற்று முன்தினம் இரவு 9:50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த வேலுாரைச் சேர்ந்த விவேக் மனோகரன் 30 என்பவரை சோதனையிட்ட போது அவரது காலணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிராம் தங்க கட்டிகள் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE