லாகூர்:பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், ஜமாத் - உத் - தவா தலைவர் ஹபீஸ் சயீதின் கூட்டாளிக்கு, பாக்., நீதிமன்றம், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர், ஜமாத் - உத் - தவா தலைவர் ஹபீஸ் சயீத். சர்வதேச பயங்கரவாதியான சயீத் உட்பட, அவரது கூட்டாளிகள் பலரும், பயங்கரவாத செயல்களுக்கு, நிதியுதவி செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவர்கள் மீது, 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 25 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஹபீஸ் சயீதுக்கு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ், 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது செய்தித் தொடர்பாளர் யஹ்யா முஜாகித் என்பவருக்கு, கடந்த மாதம், இரண்டு வழக்குகளில், 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான மற்றொரு வழக்கில், பாக்., பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, முஜாகிதுக்கு, மேலும், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல், சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மானுக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE