புதுடில்லி : முக கவசம் அணியாதவர்கள் மற்றும் கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறுபவர்களை, கொரோனா வார்டுகளில் பணியமர்த்த வேண்டும் என்ற, குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்
பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததை எதிர்த்து, குஜராத்தைச் சேர்ந்த விஷால் அவ்தானி என்பவர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
![]()
|
அதை விசாரித்த, உயர் நீதிமன்றம், 'நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு, கொரோனா வார்டுகளில் சேவை புரியும் தண்டனையை வழங்கலாம். ஒரு நாளில், ஆறு மணி நேரம் வீதம், 5 - 15 நாட்களுக்கு இந்த தண்டனையை வழங்கலாம்' என, தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், குஜராத் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.'பாதுகாப்பு கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. முக கவசம் அணிவது உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்றுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்' என, அமர்வு கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE