வால்பாறை:வால்பாறையில், 40 மையங்களில் 'கற்போம் எழுதுவோம்' இயக்ககம் மையம் துவங்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' என்ற திட்டம், வால்பாறை ஒன்றியத்தில் துவங்கப்பட்டுள்ளன.வால்பாறையில், 40 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், கையெழுத்து பயிற்சி, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், திட்ட துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித் தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் யோகேஸ்வரி திட்டத்தை துவக்கி வைத்தார்.ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், 'வால்பாறையில், 'கற்போம், எழுதுவோம்' இயக்ககத்தில், கல்வி கற்க தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பள்ளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE