உடுமலை:உடுமலை பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து, இரு நாட்களாக கழிவு நீர் வெளியேறி வருகிறது; இதனால், போக்குவரத்தும் பாதித்துள்ளது.உடுமலை நகரின் பிரதான ரோடுகளான, பொள்ளாச்சி ரோடு - தளி ரோடு சந்திப்பு பகுதியில் பாதாளச்சாக்கடை குழாய் உடைந்து, இரு நாட்களாக கழிவு நீர் வெளியேறி, ரோட்டில் ஆறு போல் ஓடி வருகிறது. குழாய் உடைப்பை அடைக்க பெரிய அளவிலான குழி தோண்டப்பட்டு, இரு நாட்களாக பணி நடக்கிறது. ஆனால், கழிவு நீர் வரத்து குறையாததால், பணி இழுபறியாகி வருகிறது. இதனால், தளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.பாதாள சாக்கடை குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்யவும், நிரந்தர தீர்வு காணவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE