கோவை:கோவை மாநகராட்சி பகுதிகளில், தற்காலிகமாக செயல்பட்டு வரும் பூமார்க்கெட், புரூக் பீல்டு மால், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கவுண்டர் மில்ஸ் ஸ்ரீவத்சா ரெசிடென்சி, வெள்ளக்கிணறு ஹட்கோ காலனி, காந்திமாநகர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில், கலெக்டர் ராஜாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையை, 100க்குள் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து, தீவிர பணியை மேற்கொண்டு வருகின்றன. கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிக தளர்வுகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன; வெளியில் வந்தால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நிற்கவேண்டியது அவசியம். எக்காரணம் கொண்டும் கூட்டமாக வந்து செல்லக்கூடாது. கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE