கோவை:கோவை ராமநாதபுரம் கொங்கு நகரை சேர்ந்த, 37 வயது பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவர் கொங்கு நகர் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். நேற்று தனது வீட்டின் பணிகளை, தனியாக நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், அவரிடம் பேச்சுக் கொடுத்தார். பெண் பதில் எதுவும் சொல்லாத நிலையில், அந்த நபர் திடீரென அவரை கீழே தள்ளி, பலாத்காரம் செய்ய முயன்றார். பெண்ணின் கூச்சலை கேட்டு அருகிலிருந்தவர்கள் அந்நபரை பிடித்து, 'பொது மாத்து' கொடுத்தனர். ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அந்நபர் ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் காமேஸ்வரன், 24 எனத்தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE