கோவை:அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களில், கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், 4 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவையில் கடந்த மாதத்தில் இருந்து, கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில், கேரளா உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களிடையே, நோய் தொற்று பாதிப்பு காணப்படுகிறது.இதனால், முன்னெச்சரிக்கையாக வாளையார், வேலந்தாவளம், மீனாட்சிபுரம் மற்றும் ஆனைகட்டி ஆகிய இடங்களில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''கோவையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில், கேரளா உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களில், 30 சதவீதம் பேருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு சென்று வருபவர்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.''அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE