திருப்பூர்;நல்ல விலை இருந்தும் பீட்ரூட் மகசூல் குறைவால் அவிநாசி சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய தாலுகாக்களில், காணப்படும் மிதமான தட்பவெப்ப நிலை, நல்ல மண் வளத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் பீட்ரூட் சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களில் சிலர், ஆண்டு முழுவதும் பீட்ரூட் சாகுபடி செய்கின்றனர்.கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், பெரும்பாலான நிலங்களில் பயிர் செய்த பீட்ரூட் அழுகிவிட்டது. நல்ல தரமான விளைச்சல் கிடைக்கவில்லை. பிட்ரூட் விலை, கிலோ 26 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நல்ல விலை இருக்கும் நிலையில் மழையால் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:'பீட்ரூட்' சாகுபடியில் ஏக்கருக்கு, 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. பராமரிப்பு செலவும் மிக குறைவு. சாகுபடி செய்த, 90 நாளில் அறுவடை செய்து ஏக்கருக்கு, 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம். தற்போது பெய்த மழையால் பெருமளவு மகசூல் வீழ்ச்சியடைந்துள்ளது. சராசரியாக ஏக்கருக்கு 5 முதல் 7 டன் வரை கிடைக்கும் தற்ேபாது, 4 டன்க்கும் குறைவாகவே கிடைக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE