வேடசந்துார் : வேடசந்துார் வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர்முருகேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
வேடசந்துார் குற்றவியல் நடுவர்நீதிமன்ற வரம்புக்குள் உள்ள வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை,திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் கீழ் கொண்டுவர, திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.இதற்கு வேடசந்துார்வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. அவ்வாறு செய்தால் வேடசந்துார் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த மாறுதல் செய்யக் கூடாது என வலியுறுத்தி, நவ.4, 5, 7 ம்தேதிகளில் நீதிமன்ற பணியில் இருந்து விலகிஇருப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE