கடலுார்:புரெவி புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் 4,000 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழைநீர் வடியாத நிலையில் மீண்டும் பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் மூழ்கியுள்ளன.
மாவட்டம் முழுவதும் 46 கிராமங்களில் 4000 ஏக்கர் நெல் பயிர் முழுதும் தண்ணீரில் மூழ்கின. அதேப் போல 13 கிராமங்களில் 1000 ஏக்கரில் போடப்பட்ட மணிலா தண்ணீரில் மூழ்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE