சென்னை:இந்திய கடலோர காவல்படை தரப்பில் கூறியதாவது: சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி, புரெவி புயல், இன்று அதிகாலை, பாம்பன் -- கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது. கடலில் மீன்பிடித்த படகுகளை, கரைக்கு திரும்புமாறு தொடர்ந்து அறிவுறுத்தப் பட்டது.
புயல் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக, 35 பேரிடர் மீட்பு நிவாரண குழுக்கள், தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.கடலோர பகுதிகளில், தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக, ஒன்பது ரோந்துகப்பல்களும் தயார் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE