திருப்பூர்:விவசாயிகளுக்கு ஆதரவாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென, டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு, மாவட்ட தலைவர் ஈஸ்வன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். அமைப்பின் செயல் தலைவர் வெற்றி சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE