பல்லடம்:பல்லடம் அருகே, மூன்று ஆண்டுக்கு பின் இரவில் பூத்த பிரம்ம கமலம் பூவை பார்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூப்பது நிஷாகந்தி எனப்படும் பிரம்ம கமலம் பூ. நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் அதிசயம் கொண்ட, இப்பூவின் வாசனை ஈர்க்கும்படியாக இருக்கும். இப்பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா பள்ளி கொண்டிருப்பது போன்றும், அதன் மேல் நாகப்பாம்பு படையெடுப்பது போன்றும் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.இந்தப்பூ பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வசிக்கும் பனியன் தொழிலாளி காளிமுத்து என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் பூத்தது.அவரின் மனைவி சாந்தி கூறுகையில், ''மூன்று ஆண்டுக்கு முன் உறவினர் ஒருவர் மூலம் பிரம்ம கமலம் செடியின் சிறப்பு அறிந்து வாங்கி வந்தோம். அன்றிலிருந்து செடியில் பூ பூக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு பூ பூத்தது. இதனால், மகிழ்ச்சி அடைந்தோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE