திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சி தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.மக்கள் பிரதிநிதிகளுக்கான உரிமை, கடமைகளை விளக்கியும், பெண் பிரதிநிதிகளின் அச்சத்தை போக்கி, நிர்வாக திறனை வளர்க்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கையேடு, பதிவேடுகள் மூலம் பராமரிப்பு அளிப்பதற்கு பதிலாக, முற்றிலும் செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து, ஊரக வளர்ச்சி முதன்மை பயிற்சியாளர்கள் கூறியதாவது:ஊராட்சியில் பெண் பிரதிநிதிகள் மட்டுமல்ல, ஆண்களும் அதிகம் பேசாமல், பயிற்சி முகாமில் பங்கேற்கின்றனர். அப்படி இருக்காமல், முதலில் அவர்களது அச்சத்தை போக்கி, எளிதாக உரையாட பயிற்சி அளிக்கப்படுகிறது.பெண் பிரதிநிதிகளின் உரிமை, அதிகாரம் மற்றும் கடமைகள் குறித்து எடுத்துரைக்கிறோம்.ஊராட்சியில் நிலவும் பிரச்னையை கூறச்செய்து, அதற்கான தீர்வுகள் எத்தகைய அரசு திட்டங்களின் மூலம் கிடைக்கும் என்பதையும் கற்பிக்கிறோம்.பாடத்திட்டமாகவோ, புத்தகமாகவோ அல்லாமல், நேரடி கலந்துரையாடலின் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதால், மிகுந்த ஈடுபாடுடன் பங்கேற்கின்றனர். இதனால், பெண் பிரதிநிதிகள் மிகுந்த தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.திருப்பூர் ஒன்றியத்தில், கடந்த இரண்டு நாட்களாக நடந்த பயிற்சி முகாமில், முதன்மை பயிற்சியாளர்கள் தீபா, சங்கீதா ஆகியோர், மக்கள் பிதிநிதிகள் மற்றும் அலுவலருக்கு பயிற்சி அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE