திருப்பூர்:கவர்னர் விருதுக்காக, சாரண மாணவ, மாணவியருக்கு, காணொலி வாயிலாக பயிற்சி முகாம் நடந்தது.திருப்பூர் மாவட்ட அளவில், முதன்மை ஆணையராக உள்ள முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மேற்பார்வையில் தேர்வு செய்யப்பட்ட, 550 சாரண, சாரணியர்களுக்கு கவர்னர் விருதுக்கான முன்தேர்வு பயிற்சி முகாம் காணொலியில் நடந்தது.பயிற்சி முகாமில், பங்கேற்றோர் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, மதிப்பிடும், காம்பஸ் திசைகளும், முதலுதவி, வழித்தட குறியீடுகள், மேப்பிங் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியின்போது, கலந்துரையாடல் மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டது. திருப்பூர் மாவட்ட சாரண ஆலோசகர் ராஜாராம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், இணைச்செயலாளர் வளர்மதி, துணை செயலாளர் தனசிங் முன்னிலை வகித்தனர். மாவட்ட பயிற்சியாளர்கள் சுதாலட்சுமி, கவுரி, மணிவேல், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE