போபால்: பிற மாநில விவசாயிகள் தங்களின் பயிர்களை ம.பி.,யில் விற்க முற்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநிலமுதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

ம.பி., மாநிலம் செஹோர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் விளையும் பயிர்கள் மட்டுமே அரசு கொள்முதல் செய்வது என முடிவு செய்துள்ளது. வேறு மாநிலத்தவர்கள் யாரும் தாங்கள் விளைவித்த பயிர்களை விற்க முற்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் என கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் எதிர்கட்சிகள் உள்ளன. வன்முறை மற்றும் குழப்பத்தை உருவாக்க எதிர்கட்சிகளை அனுமதிக்க மாட்டேன் என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE