செம்பட்டி : ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஆத்துப்பட்டி. இப்பகுதியில் போதிய ரோடு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. மழை நேரங்களில், போக்குவரத்திற்காக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து, இப்பகுதியினர் ரோட்டில் உருளும் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத நிலையில், தாங்களாகவே போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.ஊராட்சி செயலாளர் பாலாஜி கூறுகையில், 'போராட்டம் குறித்து தகவல் இல்லை. இடம் ஒதுக்கீடு, தனியாரிடம் அனுமதி பெறுவது என நடைமுறை பிரச்னைகள் உள்ளன. பி.டி.ஓ., மூலம் ரோடு வசதிக்கு முயற்சித்தும், பாதை வசதி குறித்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. உரிய இடம் கிடைத்தபின் நடவடிக்கைகள் துவங்கும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE