திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தோட்டக்கலைத்துறை பாரம்பரிய மலர்கள் மகத்துவ முன்மாதிரி ஆராய்ச்சி திடலில் 16 லட்சம் காய்கறி நாற்றுக்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இங்கு ஜூலை முதல் காய்கறிகள், பூக்களில் அதிக மகசூல் தரும் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தோட்டக்கலை துணை அலுவலர் பாஸ்கர்ராஜா நிர்வகிக்கிறார். செல்லம்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு 5 மாதங்களில் கத்தரி 4.50 லட்சம், தக்காளி 3.95 லட்சம், மிளகாய் 7.50 லட்சம் நாற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி இயக்குநர் பேபி: மலர் செடிகளில் அதிக மகசூல் பெற தொழில்நுட்ப ஆலோசனை, அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE