மதுரை : தொடர் விடுப்பால் மதுரையில் குடும்ப சூழல் கருதி அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பலர் திருப்பூர், கோவை தனியார் கம்பெனிகளுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர்.
கொரோனா தாக்கத்தால் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் குழு மற்றும் அரசு வழங்கிய 'லேப் டாப்'களில் வீடியோ பாடங்கள் பதிவேற்றம் செய்து கற்பிக்கப்படுகிறது. மாணவர்களை ஆசிரியர் கண்காணிக்கின்றனர்.கிராமப்புறங்களில் பலர் வாட்ஸ் ஆப் மற்றும் வீடியோ பாடங்களை கண்காணித்து பதில் அனுப்புவதில்லை அல்லது எப்போதாவது பதில் அனுப்புகின்றனர் என தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பின்தங்கிய கிராம பகுதிகளில் 30 சதவீதம் பேர் வாட்ஸ் குழுவில் முறையாக பதிவிடுவதில்லை. திருப்பூர், கோவைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். பள்ளி திறந்தால் வந்துவிடுவர். உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியாமல் சமாளிக்க வேண்டியுள்ளது என்றனர்.
சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில் “அரசு பள்ளிகளில் வகுப்பு, பாடம் வாரியாக வாட்ஸ்ஆப் குரூப் ஏற்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கின்றனர். அடிக்கடி அலைபேசியில் பேசி இருப்பை உறுதி செய்கின்றனர்” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE