சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் ஊராட்சிகளில் நடக்கும் ஜே.ஜே.எம்., திட்ட பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா உத்தரவிட்டார்.காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.உதவி செயற்பொறியாளர் ரகுராமன், பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமார், ராமச்சந்திரன், ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினம், ஒன்றிய பொறியாளர் சேரன், ஒப்பந்ததாரர் சரஸ்வதி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE