காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால் நிலங்களில் அதிகளவு தண்ணீர் சூழ்ந்தது. காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது கடந்த வாரம் பெய்த நிவர் புயலால் பெய்த மழையால் தேங்கி நின்ற தண்ணீரை வடிக்கட்டி விவசாயிகள் உரம் போட்டு பராமரித்தனர். தற்போது புரெவி புயல் காரணமாக நேற்று முன் தினம் அதிகாலை பெய்ய துவங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி நிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி சூழ்ந்துள்ளது. தற்போது பெய்யும் மழை இளம் சம்பா பயிர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும், வளர்ந்துள்ள நெல் பயிர்களை பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE