சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு குமார உடைப்பு வாய்க்கால் 27 கண்மதகு ஷட்டர் பாலத்தின் தடுப்புச் சுவர் கனரக வாகனம் மோதி இடிந்து விழுந்ததால் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை அருகில் கடந்த 1927 ம் ஆண்டு கட்டப்பட்ட குமார உடைப்பு வடிகால் வாய்க்கால் 27 கண் மதகு ஷட்டர் பாலத்தின் வழியாக அதிகளவு பஸ்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன.குறுகிய பாலமாக கட்டியுள்ளதால், பாலத்தை கடக்கும் போது எதிர்வரும் வாகனங்கள் கடந்து செல்லும் வரை காத்திருந்து செல்ல வேண்டும். இரவு நேரங்களில் பாலத்தில் வெளிச்சம் இல்லாமல் தடுப்புச் சுவர் மீது மோதுவது தொடர் கதையாக உள்ளது. தற்போது பாலத்தின் தடுப்புச் சுவர் கனரக வாகனம் மோதி உடைந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இடிந்துள்ள பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைத்து ஒரு வழி குறுகிய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE