கடலுார்; கடலுார் மாவட்டத்தில் புயல் மழை பாதிப்புகளை சரி செய்ய, போலீசார் தயாராக உள்ளனர்.
புரெவி புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.இதனால் மாவட்டம் முழுதும் குடியிருப்பு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யவும், மீட்பு பணியில் ஈடுபடவும், கடலுார் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள கடலுார் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட 46 போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஜே.சி.பி., இயந்திரம், மரம் அறுக்கும் கருவி போன்ற மீட்பு உபகரணங்கள் தயாராக உள்ளன. சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை போலீசார் துவக்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE