திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் சி.ஐ.டி.யூ., சார்பில் வேளாண் விரோத சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வேளாண் திருத்த சட்டம் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரியும் சி.ஐ.டி.யூ., சார்பில் திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE