சங்கராபுரம்; தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட கூட்டம் நாளை நடக்கிறது.மாவட்ட வணிகர் பேரவை பொருளாளர் முத்துக்கருப்பன் அறிக்கை:கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் மாவட்ட வணிகர் பேரவை தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை 5ம் தேதி மாலை 3:00 மணிக்கு ரோட்டரி மண்டபத்தில் நடக்கிறது.கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க கிளை நிர்வாகிகள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE