போபால்: போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தோரை நினைவுபடுத்தும் வகையில், நினைவிடம் அமைக்கப்படும் என ம.பி., அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984ம் ஆண்டு, டிச., 2 - 3 இடைப்பட்ட இரவில், ரசாயன தொழிற்சாலையில், விஷவாயு கசிந்ததில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த துயர சம்பவம் நடந்து, நேற்றுடன், 36 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதை முன்னிட்டு, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று கூறுகையில், ''போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தோரை நினைவுபடுத்தும் வகையில், நினைவிடம் அமைக்கப்படும். அந்த விபத்தில் கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு, மாதம், 1,000 ரூபாய், ஓய்வூதியமாக வழங்கப்படும்” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE