மாமல்லபுரம்; செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் - புதுப்பட்டினம் இடையில், பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கிடுகிறது.இக்கால்வாய், புதுப்பட்டினத்தில் அமைந்திருப்பினும், கல்பாக்கம் நுழைவாயில் பகுதி என்பதால், அணுசக்தி துறை நிர்வாகம், பாலம் அமைத்து உள்ளது.கல்பாக்கம், புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், கால்வாயை கடக்கும் நிலையில், பாலத்தை ஆக்கிரமித்து, கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.கடைகளின் முன், வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பாதசாரிகளுக்கு இடமின்றி, ஆபத்துடன் கடக்கின்றனர்.எனவே, பாலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE