வாலாஜாபாத்; தென்னேரி ஏரி கலங்கல் நீர் வெளியேறுவது குறைந்ததால், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கியது.வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை, தென்னேரி கிராமத்தில், 18 அடி ஆழம், 1,106.73 கன அடி நீரை தேக்கும் அளவு உடைய திரையன் ஏரி உள்ளது. இந்த ஏரி, நிவர் புயல் மழையால் நிரம்பி, கடையோடியது.இதன் உபரி நீர், தென்னேரி மேட்டு காலனி பகுதியில் இருக்கும் கலங்கலில் அதிகமாக சென்றதால், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை, கட்டவாக்கம் - மஞ்சமேடு தரைப்பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டது.தற்போது, தென்னேரி ஏரி கலங்கலில் தண்ணீர் வெளியேறுவது குறைந்ததால், கட்டவாக்கம் - மஞ்சமேடு இடையே, தடை செய்யப்பட்ட வாகன போக்குவரத்து, மீண்டும் துவங்கி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE