வேளச்சேரி; வேளச்சேரியில், கழிவுநீர் குழாய் மூடி உடைந்து பள்ளம் விழுந்துள்ளதை சரிசெய்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி, எல்.ஐ.சி., காலனி பிரதான சாலை, 30 அடி அகலம் உடையது. விஜயநகர் சந்திப்பில் மேம்பாலம் பணி நடப்பதால், கிண்டி, சைதாப்பேட்டையில் இருந்து, வேளச்சேரி வழியாக, ஓ.எம்.ஆர்., நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், எல்.ஐ.சி., காலனி வழியாக செல்கிறது.இதனால், இந்த சாலையில் எப்போதும், போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலை மைய பகுதியில், கழிவு நீர் குழாய் செல்கிறது. இதன் மூடி, சேதமடைந்த பள்ளம் விழுந்துள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் நிலைதடுமாறுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.மழை வெள்ளம் காரணமாக, பள்ளம் இருப்பது தெரியாததால், பாதசாரிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். அந்த வகையில், தினமும், ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன.பகுதிமக்கள், பள்ளத்தில்எச்சரிக்கை தடுப்பு அமைத்து, தற்காலிகமாக விபத்தை தடுத்துள்ளனர்.விபரீதத்தை உணர்ந்து, விபத்தை தடுக்க, குடிநீர் வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE