சென்னை; ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் குமார் சர்மா, 45. இவருக்கு, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், சிகிச்சைக்காக தமிழகம் வந்தார்.சிகிச்சை முடிந்து, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணிக்க, தன் மனைவியுடன், சென்னை விமான நிலையம் வந்தார். அவர் பாதுகாப்பு சோதனை செய்யும் வரிசையில் நின்ற போது, திடீரென மயங்கி விழுந்தார்.விமான நிலைய மருத்துவ குழுவினர், விரைந்து அவரை பரிசோதித்தனர். அதில் அவர், மாரடைப்பால் உயிரிழந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE