அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், புரட்டாசி பருவத்தில் பல நூறு ஏக்கரில், பி.பி.டி., பொன்னி, கோ 39, ஐ.ஆர்.20., உள்ளிட்ட நெல் ரகங்களை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நெற்பயிரில், புகையான் தாக்குதல் அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர், வட்டக்காடு பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் பி.பி.டி., பொன்னி ரக நெல் பயிரிட்டுள்ளோம். பனி மற்றும் மேகமூட்டத்தால், புகையான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE